search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய அணி"

    • டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
    • 19-ந்தேதி லண்டன் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து வருகிறது. இரு அணிகள் மோதும் 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் ஆட்டம் நாளை மறுநாள் தொடங்குகிறது. இதற்கிடையே இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் வீராட்கோலி, தனிப்பட்ட குடும்ப விஷயம் காரணமாக தாயகம் திரும்பினார் என்று தெரிவிக்கப்பட்டது. அவர் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக அணியுடன் இணைவார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் வீராட்கோலி, தென் ஆப்பிரிக்காவில் உள்ள இந்திய அணியுடன் மீண்டும் இணைந்தார். அவர் டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

    கடந்த 15-ந்தேதி இந்தியாவில் இருந்து தென்ஆப்பிரிக்காவுக்கு சென்ற கோலி, பயிற்சிகளை மேற்கொண்டார். பின்னர் அங்கிருந்து 19-ந்தேதி லண்டன் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • நாங்கள் ஒருநாள் போட்டியில் விளையாட விரும்பும் விதத்தில் நிறைய மாற்றம் ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை.
    • உலக கோப்பையில் விளையாடிய விதம் மிகவும் சிறப்பாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது.

    ஜோகன்னஸ்பர்க்:

    இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும மூன்று ஆட்டம் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு ஜோகன்னஸ்பர்க்கில் தொடங்குகிறது.

    ஒருநாள் போட்டிக்கான இந்திய அணிக்கு லோகேஷ் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரோகித், கோலி உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் லோகேஷ் ராகுல் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா விளையாடும் விதம் மாறாது. நாங்கள் ஒருநாள் போட்டியில் விளையாட விரும்பும் விதத்தில் நிறைய மாற்றம் ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை. அணியில் நிறைய புதுமுக வீரர்கள் உள்ளனர். உலக கோப்பை போட்டியில் ரோகித் சர்மா அல்லது கோலி விளையாடிய விதத்தில் அவர்கள் விளையாடுவார்கள் என்று இப்போது எதிர்பார்ப்பது சரியானதல்ல.

    அவர்களுக்கு நாம் நேரம் கொடுக்க வேண்டும். அவர்கள் வசதியாக உணர வேண்டும். எனவே இளம் வீரர்களுக்கு கூடுதல் அழுத்தம் எதுவும் இல்லை. நாங்கள் உலக கோப்பையில் விளையாடிய விதம் மிகவும் சிறப்பாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது.

    தென் ஆப்பிரிக்க சூழ்நிலையில் இந்திய அணிக்கு எந்த மாதிரியான விளையாட்டு பயன் அளிக்கிறது என்பதை பார்க்க வேண்டும். அதற்கு தகுந்தாற்போல் தங்களை உட்படுத்தி கொள்ள வேண்டும்.

    இளம் வீரர்களின் ஆட்டம் போதுமானதாக உள்ளது என்ற நம்பிக்கையை அவர்களுக்கு வழங்குவது எனக்கு முக்கியம். முடிவுகளை பற்றி கவலைப்படாமல் அவர்கள் கிரிக்கெட்டை அனுபவித்து விளையாட வேண்டும்.

    இவ்வாறு அவர்கூறினார்.

    • போட்டியில் லோகேஷ் ராகுல் தலைமையில் இந்திய அணி களம் இறங்குகிறது.
    • காயம் காரணமாக ஹர்திக் பாண்ட்யா இடம் பெறவில்லை.

    இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இன்று நடக்கிறது.

    இந்திய கிரிக்கெட் அணி, தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதலாவது ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.

    2-வது ஆட்டத்தில் மார்க்ரம் தலைமையிலான தென்ஆப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3-வது மற்றும் கடைசி ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 106 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.

    இதனைத்தொடர்ந்து இவ்விரு அணிகளும் 3 ஒருநாள் போட்டியில் ஆடுகிறது. இதில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

    இந்த போட்டியில் லோகேஷ் ராகுல் தலைமையில் இந்திய அணி களம் இறங்குகிறது. சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக ஹர்திக் பாண்ட்யா இடம் பெறவில்லை. உடல் நல பாதிப்பு காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தனது தந்தையை கவனிக்கும் பொருட்டு வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் விலகி விட்டார். அவருக்கு பதிலாக ஆகாஷ் தீப் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்திய அணியில் பேட்டிங்கில் ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்சன், கேப்டன் லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், ரிங்கு சிங்கும், பந்து வீச்சில் முகேஷ் குமார், அர்ஷ்தீப் சிங், அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவும் நல்ல நிலையில் உள்ளனர்.

     மார்பக புற்று நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி இளம் சிவப்பு (பிங்க்) நிற சீருடை அணிந்து களம் காண்கிறது. ஸ்டேடியமும் பெரும்பாலும் 'பிங்க்' நிறத்தில் காட்சியளிக்கும். தென்ஆப்பிரிக்க அணியில் பேட்டிங்கில் ரீஜா ஹென்ரிக்ஸ், கேப்டன் மார்க்ரம், வான்டெர் டஸன், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லரும், பந்து வீச்சில் லிசாத் வில்லியம்ஸ், தப்ரைஸ் ஷம்சி, பெலுக்வாயோ, கேஷவ் மகராஜூம் வலுசேர்க்கிறார்கள்.

    அண்மையில் நடந்த உலகக் கோப்பை இறுதிப்போட்டி தோல்விக்கு பிறகு இந்திய அணி விளையாடும் முதல் ஒருநாள் போட்டி தொடர் இதுவாகும். ஒருநாள் போட்டி அணியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் முனைப்பில் உள்ள இந்தியா தொடரை வெற்றியுடன் தொடங்க தீவிரம் காட்டும். அதேநேரத்தில் உள்ளூர் சூழலை சாதகமாக பயன்படுத்தி ஆதிக்கம் செலுத்த தென் ஆப்பிரிக்கா வரிந்து கட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    • உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி கோப்பையைக் கைப்பற்றியது.
    • பிரதமர் மோடி இந்திய அணியின் டிரெஸ்சிங் ரூமுக்குச் சென்று வீரர்களுக்கு ஆறுதல் கூறினார்.

    புதுடெல்லி:

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது.

    இதற்கிடையே, போட்டியை நேரில் காண வந்த பிரதமர் மோடி இந்திய அணியின் டிரெஸ்சிங் ரூமுக்குச் சென்றார். அங்கு கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட வீரர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். இதுதொடர்பான புகைப்படங்கள் வைரலானது.

    இந்நிலையில், பிரதமர் மோடி டிரஸ்சிங் ரூம் சென்று பார்வையிட்டது வீரர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தும் என முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், டிரஸ்சிங் ரூம் எப்படி இருக்கும் என்பதை நான் அறிந்திருப்பதாலும், கிரிக்கெட் வீரராக இருந்து பல ஆண்டுகளாக இந்தியாவின் பயிற்சியாளராக 7 ஆண்டுக்கும் மேலாக அந்த டிரஸ்சிங் ரூமில் இருப்பதாலும் இது ஒரு சிறந்த விஷயம் என்று நினைக்கிறேன்.

    நாட்டின் பிரதமரைப் போன்ற ஒருவர் டிரஸ்சிங் ரூமுக்கு வந்து பார்வையிட்டால், அது மிகப்பெரிய ஒன்று. ஏனெனில் அது வீரர்களின் உற்சாகத்தை உயர்த்தும். ஒரு நாட்டின் பிரதமராக இருக்கும்போது டிரஸ்ஸிங் ரூமுக்குள் செல்வது சிறப்பு. இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்திருந்தால் உங்களுக்குத் தெரிந்ததைப் போல என்ன உணர்ந்திருப்பேன் என்று எனக்குத் தெரியும் என குறிப்பிட்டார்.

    • காவி நிறத்தில் பயிற்சி ஜெர்சிகளை அறிமுகப்படுத்தி அணியை காவி நிறமாக்க முயன்றனர்.
    • ராகுல் காந்தியின் இந்த கருத்துக்காக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

    உலகக்கோப்பை இறுதிப் போட்டி கொல்கத்தா அல்லது மும்பையில் நடந்திருந்தால் இந்தியா கோப்பையை வென்றிருக்கும் என்று மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

    மேற்கு வங்காளம், கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள்விளையாட்டு அரங்கில் கட்சி தொண்டர்களிடம் மம்தா பானர்ஜி உரையாற்றினார். அப்போது, இந்திய கிரிக்கெட் அணியை "காவி நிறமாக்கும்" முயற்சிகள் நடப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.

    இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:-

    மத்தியில் ஆளும் ஆட்சி முழு நாட்டையும் காவி வண்ணம் பூச முயற்சிக்கிறார்கள். நம் இந்திய வீரர்களைப் பற்றி நாங்கள் பெருமைப்படுகிறோம். மேலும் இறுதிப்போட்டி கொல்கத்தா அல்லது வான்கடேவில் (மும்பையில்) நடந்திருந்தால் நாம் உலகக் கோப்பையை வென்றிருப்போம் என்று நம்புகிறேன்.

    அவர்கள் காவி நிறத்தில் பயிற்சி ஜெர்சிகளை அறிமுகப்படுத்தி அணியை காவி நிறமாக்க முயன்றனர். வீரர்கள் எதிர்த்தனர். இதன் விளைவாக, அவர்கள் போட்டிகளின்போது அந்த ஜெர்சிகளை அணிய வேண்டியதில்லை. பாவிகள் எங்கு சென்றாலும், அவர்கள் தங்கள் பாவங்களை எடுத்துச் செல்கிறார்கள்.

    இந்திய அணி மிகவும் சிறப்பாக விளையாடியது. பாவிகள் கலந்துகொண்ட போட்டியைத் தவிர உலகக் கோப்பையில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றனர்.

    முன்னதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ராஜஸ்தானில் நடந்த பொதுக்கூட்டத்தின்போதான உரையில், "உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அவர் "துர்ரதிர்ஷ்டசாலி'' என்ற வார்த்தையைப் பிரயோகம் செய்தார்.

    ராகுல் காந்தியின் இந்த கருத்துக்காக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஆஸ்திரேலியா 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
    • இந்திய அணிக்கு ரசிகர்கள் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

    குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    3வது முறையாக உலகக்கோப்பையை வெல்வோம் என்கிற இந்திய அணியின் கனவு இந்த முறையும் கனவாகவே போனது. இருப்பினும், இந்திய அணிக்கு ரசிகர்கள் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், உலகக்கோப்பையில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த்துக்களும் இந்திய அணிக்கு பாராட்டுகளும் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில்," உலகக் கோப்பையில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு வாழ்த்துகள். போட்டியின் மூலம் அவர்களின் ஒரு பாராட்டுக்குரிய செயல்திறன் மற்றும் ஒரு அற்புதமான வெற்றியில் உச்சக்கட்டத்தை அடைந்தது. இன்று அவரது சிறப்பான ஆட்டத்திற்காக டிராவிஸ் ஹெட்க்கு பாராட்டுக்கள்.

    அன்புள்ள இந்திய அணி, உலகக் கோப்பையின் மூலம் உங்கள் திறமையும் உறுதியும் குறிப்பிடத்தக்கது. நீங்கள் மிகுந்த உற்சாகத்துடன் விளையாடி தேசத்திற்குப் பெருமை சேர்த்திருக்கிறீர்கள்.

    நாங்கள் இன்றும் எப்போதும் உங்களுடன் துணை நிற்கிறோம்" என குறிப்பிட்டிருந்தார்.

    தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள பதிவில்," உலகக் கோப்பையில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு வாழ்த்துகள்.

    அரையிறுதி வரை தோற்கடிக்க முடியாத ஆட்டத்தை வெளிப்படுத்தி, இறுதிப் போட்டிக்கு உற்சாகமாக நுழைந்த இந்திய அணிக்கு பாராட்டுக்கள். உங்கள் நெகிழ்ச்சியும் ஆர்வமும் உண்மையிலேயே பாராட்டுக்குரியது" என்றார்.

    • ரசிகர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு விதமான வேண்டுதல்கள், வாழ்த்து அட்டைகளை வெளியிட்டு உற்சாகப்படுத்தி வருகின்றனர்.
    • உலககோப்பை மாதிரியை 11 பேர் கொண்ட கிரிக்கெட் ரசிகர்கள் இணைந்து 11மணி நேரம் உழைத்து தயாரித்து உள்ளனர்.

    திருச்சி:

    உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் இந்தியா வெற்றி பெற கிரிக்கெட் ரசிகர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு விதமான வேண்டுதல்கள், வாழ்த்து அட்டைகளை வெளியிட்டு உற்சாகப்படுத்தி வருகின்றனர்.

    திருச்சியில் ரசிகர்கள் சற்று வித்தியாசமாக 15 அடி பிரம்மாண்டமான கிரிக்கெட் உலகக்கோப்பை மாதிரி செய்து காட்சிக்கு வைத்துள்ளனர். அத்துடன் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்து 'ஆல் தி பெஸ்ட் இந்தியா' என்ற வாசகத்துடன் கூடிய பேனரும் வைக்கப்பட்டு உள்ளது.

    திருச்சி மேலப்புலிவார்டு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இதை நிறுவி உள்ளனர். இந்த உலககோப்பை மாதிரியை 11 பேர் கொண்ட கிரிக்கெட் ரசிகர்கள் இணைந்து 11மணி நேரம் உழைத்து தயாரித்து உள்ளனர்.

    லட்சுமி நரசிம்மன் தலைமையிலான இந்தக் குழுவினர் பிரம்மாண்டமான உலகக் கோப்பை வைத்து வாழ்த்து தெரிவிப்பது இத்துடன் 3 வது முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோப்பை திருச்சி, மேலப்புலிவார்டு ரோடு இப்ராஹிம் பூங்கா எதிர்வரிசையில் ஒரு வணிக வளாகத்தின் முன்பு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. பலரும் இதை ஆர்வத்துடன் பார்த்து செல்கிறார்கள்.

    ஏற்கனவே திருச்சி மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில் இந்தியாவில் நடைபெற்று வரும் கிரிக்கெட் உலகக் கோப்பையையொட்டி 60 ஆண்டு காலம் சேகரித்து பாதுகாத்து வைத்திருந்த பழங்கால நாணயங்களை கொண்டு உலகக்கோப்பையை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு கண்காட்சி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த கண்காட்சியில் கிரிக்கெட் உலக கோப்பையை வாழ்த்தும் வகையில் 1975-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை உள்ள இந்திய நாணயங்களை கொண்டு திருச்சிராப்பள்ளி நாணயவியல் கழக செயலாளர் பத்ரி நாராயணனால் உருவாக்கப்பட்ட உலக கோப்பை மத்திய நூலகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நாணயங்களில் இந்திய அணி முன்னாள் கேப்டன் கபில்தேவ், திருச்சி மாவட்டத்தில் தனியார் பள்ளியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பொழுது இந்த நாணயங்களால் வடிவமைக்கப்பட்ட உலக கோப்பை அருகே கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • 2015ல் டி வில்லியர்ஸ் அடித்த 58 சிக்சர்கள்தான் இதுவரை சாதனையாக இருந்து வந்தது
    • 2019ல் மோர்கன் அடித்த 22 சிக்சர்கள்தான் இதுவரை சாதனையாக இருந்து வந்தது

    இந்தியாவில் அக்டோபர் 5 அன்று தொடங்கிய ஐசிசி ஆண்கள் ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் உலக கோப்பை 2023 போட்டித்தொடரில் இதுவரை இந்தியா ஒரு போட்டியிலும் தோல்வி அடையாமல் ரசிகர்கள் உற்சாகம் அடையும் அளவிற்கு வெற்றி பெற்று வந்திருக்கிறது. இத்தொடரின் இறுதி போட்டி, நவம்பர் 19 அன்று குஜராத் மாநில அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.

    இதுவரை பேட்டிங்க், ஃபீல்டிங் மற்றும் பவுலிங் என அனைத்து அம்சங்களிலும் இந்திய வீரர்கள் சிறப்பாக  செயல்பட்டு வருவதால், இந்தியா கோப்பையை வெல்வது எளிது என நம் நாட்டிலும், பிற நாடுகளிலும் உள்ள இந்தியர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் போட்டிகளை கண்டு வருகின்றனர்.

    இத்தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா உட்பட இந்திய வீரர்கள் பல சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர்.

    நவம்பர் 12 அன்று கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இந்தியாவிற்கும் நெதர்லாந்திற்கும் இடையேயான போட்டி நடைபெற்றது. முதலில் ஆடிய இந்திய வீரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்து நெதர்லாந்திற்கு 411 என இலக்கு நிர்ணயித்தனர்.

    இதில் களமிறங்கிய இந்திய கேப்டனும் முன்னணி வீரருமான ரோகித் சர்மா, 8 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 54 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார்.

    தனது 61 ரன் குவிப்பின் போது ரோகித் சர்மா 2 சாதனைகளை நிகழ்த்தினார்.

    ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் ஒரு வருட காலகட்டத்தில் ஒரு வீரர் அடிக்கும் சிக்சர்களுக்கான கணக்கெடுப்பில், ரோகித், இதுவரை 60 சிக்சர்களை அடித்துள்ளார். இதுவரை 2015ல் தென் ஆப்பிரிக்க வீரர் டி வில்லியர்ஸ் அடித்திருந்த 58 சிக்சர்கள்தான் அதிக எண்ணிக்கைக்கான சாதனையாக இருந்து வந்தது. ரோகித் அந்த சாதனையை முறியடித்தார்.

    இது மட்டுமின்றி மற்றொரு சாதனையையும் ரோகித் புரிந்தார்.

    ஐசிசி உலக கோப்பைக்கான ஒரு போட்டி தொடரின் போது, ஒரு அணியின் கேப்டன் அடிக்கும் அதிக சிக்சர்கள் எண்ணிக்கைக்கான கணக்கெடுப்பில், 24 சிக்சர்கள் அடித்து ரோகித் முதலிடம் வகிக்கிறார். இதுவரை 2019-ஆம் ஆண்டு இங்கிலாந்தின் இயான் மோர்கன் அடித்த 22 சிக்சர்கள்தான் சாதனையாக இருந்து வந்தது. ரோகித் அந்த சாதனையையும் முறியடித்தார்.

    இந்தியாவிற்கு இன்னும் 2 போட்டிகள் மீதம் உள்ளதால் ரோகித்தின் சிக்சர் கணக்குகளும், அவரது சாதனைகளும் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர்.

    • இந்தியா இலங்கையை இப்படி தோற்கடிக்கும் என்று நான் கற்பனை செய்யவில்லை.
    • ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

    கராச்சி:

    6 அணிகள் பங்கேற்ற 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 30-ந்தேதி தொடங்கியது. இலங்கை, பாகிஸ்தான் இணைந்து நடத்திய இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் மற்றும் சூப்பர்4 சுற்று முடிவில் இந்தியாவும், இலங்கையும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

    இவ்விரு அணிகளில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்று அரங்கேறியது. இதில் இலங்கை அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வீழ்த்தி 8-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

    இந்நிலையில் எதிர்வரும் உலகக்கோப்பையில் இந்தியா மிகவும் ஆபத்தான அணியாக இருக்கும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ரோகித் சர்மாவின் கேப்டன்சி மேம்பட்டுள்ளது. அவரும் அணி நிர்வாகமும் சிறப்பான முடிவுகளை எடுத்து வருகின்றனர். இந்தியா இலங்கையை இப்படி தோற்கடிக்கும் என்று நான் கற்பனை செய்யவில்லை.

    இங்கிருந்து, உலகக்கோப்பையில் இந்தியா மிகவும் ஆபத்தான அணியாக இருக்கலாம். நல்ல வேலை செய்தீர்கள் சிராஜ். நீங்கள் இந்தியாவின் வெற்றிக்கு உதவி செய்தீர்கள். உங்கள் பரிசுத் தொகையை மைதான ஊழியர்களுக்குக் கொடுத்து நீங்கள் சிறப்பாகச் செய்தீர்கள்.

    இந்தியா உலகக்கோப்பைக்கு அவர்களின் நம்பிக்கையை உயர்த்திய பிறகு செல்கிறது. இந்தியா பின்தங்கிய நிலையில் தொடங்கியது. ஆனால் இப்போது இந்திய அணியின் செயல்பாடு பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல, பல நாடுகளுக்கும் கவலையாக இருப்பதாக உணர்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இலங்கை 50 ரன்னில் சுருண்டது. சிராஜ் 6 விக்கெட் சாய்த்தார்
    • இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

    ஆசிய கோப்பை இறுதிப் போட்டி நேற்று கொழும்பில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய இலங்கை 50 ரன்னில் சுருண்டது. பின்னர், இந்தியா விக்கெட் இழப்பின்றி சேஸிங் செய்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    100 ஓவர்கள் கொண்ட இந்த போட்டி 21.3 ஓவர்களிலேயே முடிவடைந்தது. போட்டி முன்னதாகவே முடிந்த நிலையில், இந்திய வீரர்கள் உடனடியாக இந்தியா திரும்பினர். அவர்கள் இன்று காலை மும்பையில் உள்ள கலினா விமான நிலையம் வந்தடைந்தனர். அதன்பின், சொகுசு காரில் தங்களது வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றனர்.

    இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா போன்றோர் தங்களது சொகுசு காரில் புறப்பட்டுச் சென்றனர். வெறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள், மும்பையில் இருந்து விமானங்கள் மூலம் தங்களது சொந்த மாநிலங்களுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

    • இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 5ம் தேதி சென்னையில் எதிர்கொள்கிறது.
    • உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

    இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. அக்டோபர் 5ம் தேதி நடைபெற உள்ள தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் அகமதாபாத்தில் மோத உள்ளன.

    இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 5ம் தேதி சென்னையில் எதிர்கொள்கிறது. உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

    இந்நிலையில், உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட உள்ளது. இன்று மதியம் 1.30 மணிக்கு இலங்கையின் கண்டியில் இந்த அறிவிப்பு வெளியாகும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    • இந்திய கிரிக்கெட் அணி உள்ளூர் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமம் ஏலம் விடப்பட்டது.
    • ஐந்து ஆண்டுகளுக்கு போட்டிகளை ஒளிபரப்பும் உரிமத்தை முகேஷ் அம்பானியின் நிறுவனம் கைப்பற்றியது.

    இந்திய கிரிக்கெட் அணி உள்நாட்டில் விளையாடும் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமத்துக்கான ஏலம் நடைபெற்று இருக்கிறது. இதில் இந்திய கிரிக்கெட் அணியின் உள்ளூர் போட்டிகளை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஒளிபரப்புவதற்கான டி.வி. மற்றும் டிஜிட்டல் உரிமத்தை முகேஷ் அம்பானியின் வியாகாம் 18 நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

     

    அதன்படி பி.சி.சி.ஐ. சார்பில் உள்நாட்டில் நடத்தப்படும் இந்திய அணி கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்புவதற்கான உரிமைத்தை வியாகாம் 18 நிறுவனம் ரூ. 5 ஆயிரத்து 963 கோடிகளை கொடுத்து கைப்பற்றி இருக்கிறது.

    இதில் ரூ. 3 ஆயிரத்து 101 கோடி டிஜிட்டல் உரிமத்திற்கு செலுத்துகிறது. அந்த வகையில் டிஜிட்டலில் ஒரு போட்டியை ஒளிபரப்புவதற்கான தொகை ரூ. 35 கோடியே 23 லட்சம் ஆகும். டி.வி.-யில் ஒரு போட்டியை ஒளிபரப்புவதற்கான தொகை ரூ. 32 கோடியே 52 லட்சம் ஆகும்.

    ×